Aug 22nd 2008அபூ உஸாமாபொதுவானவை
குளச்சலில் 70 நாட்கள் தொடர் தஃவா பிரசாரம்
Aug 21st 2008அபூ உஸாமாசெய்திகள்
அன்பான சகோதர, சகோதரிகளுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும். இன்ஷா அல்லாஹ் வரும் 17/08/2008 முதல் 26/10/2008 வரை (70 நாட்கள்) நன்மையை ஏவித் தீமையை விலக்கும் தொடர் தஹ்வாப் பிரசாரம் நடைபெற உள்ளது. இதில் தீவிரவாதம், வரதட்சணை மற்றும் சமூகக் கொடுமைகளுக்கெதிராக பொதுக் கூட்டங்கள், தெருப் பிரசாரங்கள், பிரசுரப் பிரசாரங்கள் மற்றும் வீடுவீடாகச் சென்று நேரடித் தஹ்வாப் பிரசாரங்களும் நடைபெற உள்ளது. வெற்றிபெறத் துஆச் செய்யுங்கள். அத்துடன் இந்தப் பிரச்சாரங்கள் முழுமையுடன் வெற்றிபெற உங்களால் இயன்ற நிதியுதவியும் செய்து உதவும்படி அன்பாய் கேட்டுக்கொள்கிறோம். உங்களது நிதியுதவியை அனுப்பிவைக்க தொடர்பு கொள்ளவேண்டியது. சகோதரர் மாஹீன் - +91 93452 35598 ( மஸ்ஜிதுல் முனீஃபின் தலைவர் - குளச்சல் ) காசோலைகள் அனுப்புவோர் கீழே குறிப்பிட்டுள்ள வங்கிக் கணக்கிற்கு அனுப்பிவைக்கலாம் இன்ஷா அல்லாஹ். Account Details to send your Donations: வங்கி: Tamilnadu Mercantile Bank Ltd., Colachel Branch, Joint Ac No#000174# Mr.S.Maheen Aboobakker or M.Mujeebu Rahman. அல்லாஹ் தஆலா இந்த தஹ்வாப் பணிக்கு உதவும் அத்தனை நல்லுள்ளங்களுக்கும் ஈருலகிலும் அதற்குரிய நல்லருளை வாரி வழங்குவானாக! ஆமீன்.மேலதிக விபரத்திற்கு: sathick@gmail.com -ல் தொடர்பு கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ். |
இந்தியா டுடே பத்திரிகையை உடனே தடைசெய்!
Aug 19th 2008அபூ உஸாமாசெய்திகள்
இந்தியா டுடே பத்திரிகையை உடனே தடைசெய்!
ஒற்றுமையாக இருக்கும் இந்திய மக்களுக்கிடையே மத துவேஷத்தைத் தூண்டக்கூடிய இந்தியா டுடே பத்திரிகையை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
மத்திய, மாநில அரசுகளே! இந்தியா டுடே பத்திரிகையை உடனே தடைசெய்!
JAQH தமிழ்நாடு.
(இவ்வாறு நோட்டிஸ் அடித்து தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்டது.)
இம்மாத (ஆக 2008) அல்ஜன்னத் இதழில்
Aug 6th 2008அபூ உஸாமாசெய்திகள்
இம்மாத (ஆக 2008) அல்ஜன்னத் இதழில்
இஸ்லாம் அறிவியலுக்கு எதிரானதா?
தொழுகையில் மறந்தால் என்ன செய்ய வேண்டும்?
மிஷ்காத்துல் மஸாபீஹ்….
பாவங்களைப் போக்கும் நல்லறங்கள்
யமாமா போர்
குர்ஆன் மற்றும் பைபிள் ஓர் ஒப்பீடு
பான்பாரக் விபரீதம்
சிலந்தி
கேள்வி பதில்
பசி
உலமாக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்
திடல் தொழுகையா? திடலில் தொழுகையா?
இஸ்லாமிய எழுச்சி
மனம் திறந்த மடல்
மற்றும் பல துணுக்குகளுடன் வெளிவந்துள்ளது.
படியுங்கள் பரப்புங்கள்.
பாவங்களைப் போக்கும் நல்லறங்கள்
Aug 5th 2008அபூ உஸாமாகட்டுரைகள்
பாவங்களைப் போக்கும் நல்லறங்கள்
முஹம்மது ஜீலானி ஃபிர்தவ்சி
பொதுவாக மனித சமூகத்தில் பெரும்பாலும் தனக்கு அல்லது பிறருக்குச் செய்யும் செயல்களில் பாவங்கள் கலந்து காணப்படுகின்றன. பாவங்களைச் செய்யும் மனிதன் தன் பாவங்களை உணரும் போது தன்னைப் படைத்தவன் அப்பாவங்களை மன்னிக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றான். சில வேளையில் பரிகாரங்கள் செய்து தனது பாவங்களைப் போக்கி படைத்தவனின் மன்னிப்பைப் பெற எண்ணுகின்றான். பரிகாரங்கள் என்ற பெயரிலும் பாவங்களைத்தான் செய்கின்றான்.
பாவங்களைப் போக்கி மன்னிப்பு வழங்கும் விசயத்தில் இஸ்லாம் முஸ்லிம்களுக்கு பல நற்செயல்களைக் கற்றுத்தந்துள்ளது. அந்நற்செயல்களை முறைப்படி செய்தால் பாவங்கள் அழிக்கப்பட்டு மன்னிக்கப்படுகின்றன.
இஸ்லாமில் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கும் போக்கப்படுவதற்கும் ஒரே இறைவனை அவனுக்கு இணை, துணையற்ற நிலையில் நம்பிக்கை கொள்வது முக்கிய அடிப்படையாகும். இக்கொள்கை விசயத்தில் மாறுசெய்தால் ஒரு முஸ்லிமின் எந்தப் பாவமும் மன்னிக்கப்படமாட்டாது. எனவே பாவமன்னிப்பின் முதல் நற்செயலாக கலப்பற்ற (ஈமான்) இறைநம்பிக்கைதான் இடம் பிடித்துள்ளது.
அல்லாஹ் எச்சரித்து வாக்களிக்கிறான்:
தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்கமாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்) தை தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப்பெரிய பாவத்தையே கற்பனை செய்தார். (4:48)
மேலும் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தால் நல்லறங்கள் அழிந்து நட்டமடைந்தவர் பட்டியலில் சேர்ப்பேன் என்றும் கூறுகிறான்.
அவர்கள் (அல்லாஹ்வுக்கு) இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த (நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்துவிட்டிருக்கும். (6:88)
(நபியே) நீர் (அல்லாஹ்வுக்கு) இணை கற்பித்தாலும் உமது நல்லறம் அழிந்து, நீர் நட்டமடைந்தவராவீர். (39:85)
நல்லறங்களும் பாவமன்னிப்பும்:
உண்மையான முஸ்லிமைப் பொறுத்தவரை அல்லாஹ்வும் அவனது தூதரும் கற்றுத்தந்த முறைப்படி நல்லறங்கள் செய்து கொண்டிருந்தால் அவர்கள் செய்யும் பாவங்கள் மன்னிக்கப்படும். அத்துடன் அந்நல்லறங்கள் தொடரும் போது அவர்களிடம் இருக்கின்ற பாவங்கள் பெரும்பாலும் அழிந்துவிடும். பெரும் பாவங்களான இணைவைத்தல், மூமினைக் கொலை செய்தல், வட்டி போன்ற பெரும் பாவங்களை விட்டொழித்து நல்லறங்கள் அதிக அதிகமாகச் செய்யும்போது அவர்களிடம் உள்ள சிறு சிறு பாவங்களும் தவறுகளும் அவர்களுக்கு மன்னிக்கப்படும். அத்துடன் நல்லறங்களுக்கான கூலியும் வழங்கப்படும்….
இஸ்லாம் அறிவியலுக்கு எதிரானதா?
Aug 4th 2008அபூ உஸாமாசெய்திகள்
இஸ்லாமிய மார்க்கம் அகிலத்தின் இரட்சகனான வல்ல அல்லாஹ்வால் மனித சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட நெறியாகும். இந்த மார்க்கம் மனித வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து விசயங்களையும் மனிதனுக்குப் போதித்திருக்கின்றது. உலகம் அழியும் நாள்வரை மனிதர்கள் சந்திக்கின்ற பிரச்சினைகள் எல்லாவற்றிற்கும் தீர்வுகளைக் கூறிக்கொண்டிருக்கிறது. காரணம் இந்த மார்க்கம் முழுமையான மார்க்கம். மனித சமுதாயத்திற்கு வழிகாட்ட வந்த இறுதி இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே இந்த மார்க்கத்தை முழுமைப்படுத்திவிட்டதாக வல்ல இறைவன் அல்லாஹ் கூறுகின்றான்.
இன்றைய தினம் உங்களுக்கு உங்கள் மார்க்கத்தைப் பரிபூரணமாக்கிவிட்டேன். மேலும் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கிவிட்டேன். இன்னும் உங்களுக்கு இஸ்லாமிய மார்க்கத்தை வாழ்க்கை நெறியாகவும் தேர்ந்தெடுத்துள்ளேன். (அல்குர்ஆன்:5-3)
மனித வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருக்கின்ற பரிசுத்த குர்ஆன் மனிதன் எக்காலத்திலும் சந்திக்கின்ற மார்க்கம் சம்பந்தப்பட்ட விசயங்களானாலும் சரி அறிவியல் விசயங்களானாலும் சரி எல்லாவற்றையும்; விளக்கிக் கூறுகின்றது. மனிதன் இறைவனுக்குச் செலுத்த வேண்டிய வணக்க வழிபாடு என்னென்ன என்பதைக் குறிப்பிடுகின்றது திருக்குர்ஆன். அதை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பதை இறைத்தூதர் விளக்கிக் கூறியிருக்கின்றார்கள். இவ்வாறே ஒவ்வொரு காலத்திலும் ஏற்படுகின்ற அறிவியல் மாற்றங்களைப் பற்றியும் திருக்குர்ஆன் அறிவிக்கின்றது. திருக்குர்ஆன் இறக்கப்பட்ட காலத்தில் இன்று நாம் கண்டுகொண்டிருக்கின்ற எந்த அறிவியல் வளர்ச்சியும் இருந்திருக்கவில்லை. ஆனால் அறிவியல் வளர்ச்சியில் மனிதன் ஈடுபடவேண்டுமென்று அன்றே இறைவன் மனிதனுக்குக் கட்டளையிட்டுவிட்டான். திருக்குர்ஆன் வசனங்களைப் படித்துப் பார்க்கும் போது இதை நம்மால் புரிய முடியும். மனிதன் தனது அறிவைப் பயன்படுத்தி ஆராய்ச்சி செய்யுமாறு தூண்டுகின்ற வசனங்களைச் சிந்தித்துப் பார்ப்பது இறைநம்பிக்கையாளர்கள் மீது கடமையாக இருக்கின்றது.
ஏழு வானங்களையும் அல்லாஹ் அடுக்கடுக்காக எப்படிப் படைத்திருக்கின்றான் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா? இன்னும் அவற்றில் சந்திரனைப் பிரகாசமாகவும், சூரியனை ஒளிவிளக்காகவும் அவனே ஆக்கியிருக்கின்றான். (அல்குர்ஆன்:71-15)
அல்லாஹ் ஏழு வானங்களைப் படைத்திருக்கின்றான் என்றும் அதை அடுக்கடுக்காகப் படைத்திருக்கின்றான் என்றும் குர்ஆன் கூறுகிறது. இந்த விசயத்தை நீங்கள் ஆராய்ச்சி செய்து பார்க்க வேண்டாமா என்று மக்களைப் பார்த்து இறைத்தூதர் நூஹ் (அலை) அவர்கள் கேட்டார்கள். இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் தூதராக அனுப்பப்பட்டவர்தான் நூஹ்(அலை) அவர்கள். அப்படியானால் மனிதன் அல்லாஹ்வுடைய படைப்பைச் சிந்தித்து ஆராய்ச்சி செய்யுமாறு ஆதிமுதலே இறைவன் கட்டளையிட்டுள்ளான் என்பது தெரியவருகின்றது.
மேலும் அல்லாஹ் சொல்வதைப் பாருங்கள்! நிச்சயமாக வானங்களும் பூமியும் முதலில் இணைந்திருந்தன என்பதையும் அவற்றை நாமே பிரித்தமைத்தோம் என்பதையும் உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் நீரிலிருந்து படைத்தோம் என்பதையும் நிராகரிப்பாளர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? (அல்குர்ஆன் 21:30)
இன்னும் அவனே இரவையும் பகலையும் சூரியனையும் சந்திரனையும் படைத்தான். வானில் தத்தமது வட்டவரையறைக்குள் ஒவ்வொன்றும் நீந்துகின்றன. (அல்குர்ஆன் 21:33)
வானங்கள், பூமி என்ற பிரபஞ்சத்தையும் அல்லாஹ் படைத்துள்ள மற்ற படைப்புகளையும் அவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? (அல்குர்ஆன் 7:185)
சூரியன் தன் வரையறைக்குள் சென்று கொண்டிருக்கிறது. இது யாவரையும் மிகைத்தோனும் யாவற்றையும் நன்கு அறிந்தோனுமாகிய இறைவன் விதித்ததாகும். இது அவர்களுக்கு ஓர் அத்தாட்சியாகும்.
இன்னும் உலர்ந்து வளைந்த பழைய பேரீத்த மட்டையைப் போலாகும் வரை சந்திரனுக்கு நாம் பல நிலைகளை ஏற்படுத்தியிருக்கின்றோம். சூரியன் சந்திரனை நெருங்கிப் பிடிக்க முடியாது. இரவு பகலை முந்த முடியாது. இவ்வாறே எல்லாம் தம் வட்ட வரையறைக்குள் நீந்தி வருகின்றன. (அல்குர்ஆன்:36:38-40)
இது போன்ற வசனங்களை வல்ல அல்லாஹ் திருக்குர்ஆனின் நூற்றுக்கணக்கான இடங்களில் சொல்கின்றான் என்றால் அவற்றைப் படித்துவிட்டுக் கடந்து செல்வதற்காக அல்ல. சிந்தித்து ஆராய்வதற்காகவும் அவற்றைத் தங்கள் வாழ்வில் கடைப்பிடிப்பதற்காகவுமே கூறுகின்றான்.
சிந்தனையைத் தூண்டுகின்ற இவை போன்ற வசனங்களையெல்லாம் ஆய்வு செய்யக்கூடியவர்களும் அதிலிருந்து பயன்பெறக்கூடியவர்களும் பெரும்பாலும் முஸ்லிம் அல்லாதவர்களாகவே இருக்கின்றனர். அல்லாஹ்வுடைய படைப்புகளைப் பற்றி ஆய்வு செய்து பயன்பெறுகின்ற பொறுப்பை மாற்றான் கையில் கொடுத்துவிட்டார்களோ என்று நினைக்க வேண்டியிருக்கிறது. அந்த அளவிற்கு அறிவியல் விசயங்களை நம்புவதிலும் அவற்றைப் பயன்படுத்துவதிலும் முஸ்லிம் சமுதாயம் மிகவும் பின்னடைந்து இருக்கிறது. குறிப்பாக அரபி மதரசாக்களில் குர்ஆன், சுன்னா கல்வியைக் கற்பவர்கள் குர்ஆன் கூறுகின்ற இவை போன்ற உண்மைகளைப் பற்றி ஆய்வதை விட்டும் கண்ணை மூடிக்கொள்கின்றனர். வளர்ந்து வருகின்ற அறிவியல் உலகத்தில் இஸ்லாம் எந்த வகையிலும் உண்மையான அறிவியலுக்கு மாற்றமானதில்லை என்பதை நிரூபிப்பதற்கு மார்க்கம் கற்ற அறிஞர்கள் முன் வரவேண்டும்.
நாம் அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு முன்வராவிட்டாலும் அல்லாஹ்வுடைய படைப்புகளைப் பற்றி ஆய்வு செய்து வெளியில் கொண்டுவருகின்ற ஆராய்ச்சியாளர்களின் சரியான ஆய்வுகளை இஸ்லாத்திற்கு விரோதமில்லாதிருக்கும் நிலையில் அதை ஏற்றுக்கொண்டு செயல்படவேனும் முன்வர வேண்டும்.
அவர்கள் திருக்குர்ஆனைச் சிந்தித்து ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? இது அல்லாஹ் அல்லாதவர்களிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.
(அல்குர்ஆன்:4:82) (முற்றும்)
இஸ்லாமிய பொதுக் கூட்டம்
Jul 26th 2008அபூ உஸாமாசெய்திகள்
இஸ்லாமிய பொதுக் கூட்டம்
இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம்
இடம்: பள்ளிவாசல் தெரு, இடலாக்குடி, கோட்டாறு, குமரி மாவட்டம்.
நாள்: 01- 08- 2008 வெள்ளி மாலை சரியாக 7 மணிக்கு இன்ஷா அல்லாஹ்.
தலைமை: அப்பாஸ் M அப்துர் ரஸ்ஸாக் JAQH கோட்டாறு கிளைத் தலைவர்
சிறப்புரை
S..கமாலுத்தீன் மதனீ JAQH மாநிலத் தலைவர்
S.செய்யது அலீ ஃபைஸி முதல்வர்- கதீஜா பெண்கள் அரபிக் கல்லுரி H. ஐதுரூஸ் B.Aசெயலாளர் JAQH குமரி மாவட்டம் மாணவரணி
J.S. யாஸீன் இம்தாதீ கதீப் JAQHமர்கஸ் வேர்க்கிளம்பி
கோவை ஜலீல் JAQH மாநிலப் பேச்சாளர்
மற்றும் பலர்
அல்-ஜன்னத் ஜுலை 2008 தலையங்கம்
Jul 8th 2008அபூ சஆத்கட்டுரைகள் & செய்திகள் & பொதுவானவை
இழிவுபடுத்தப்படாத இறைத்தூதர்கள் இல்லை
படைத்த இறைவனாகிய அல்லாஹ்வின் பால் மக்கமளை அழைத்து அ வனுடைய மார்க்கமாகிய இஸ்லாத்தினை அறிமுகப்படுத்துவதற்காகவும்,
மனிதன் ஏன் உலகில் படைக்கப்பட்டான் என்ற இலட்சியத்தை உணர்த்துவதற்காகவும் இறைத்தூதர்களைத் தேர்வு செய்து இறைவன்
அனுப்பிவைத்தான் அந்த இறைத்தூதர்கள் தங்களுடைய இலட்சியத்தை நிறைவேற்றுகின்ற பாதையில் எண்ணற்ற துன்பங்களை சந்தித்துள்ளார்கள்
இறைவனுடைய மார்க்கத்தின் பால் மக்களை அழைத்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காகவே அவர்களைக் கஷ்டப்படுத்திளார்கள் எள்ளி
நகையாடினார்கள், ஏளனம் செய்தார்கள் அந்த இறைத்தூதர்களில் கல்லெறியப்படாதவர்கள் யாருமில்லை, பிறந்த சொந்த மண்ணைவிட்டும்
விரட்டப்பட்டவர்கள் பலர்.
ஒவ்வொரு காலத்திலும் வாழ்ந்த இறைத்தூதர்கள் பலவிதமான விமர்சனத்திற்குள்ளாக்கப்பட்டார்கள், நபியாக இருந்தால் அவரிடத்தில் ஆட்பலம்
இருக்கவேண்டும். அதிகார பலம் இருக்க வேண்டும் என்றெல்லாம் கருதினார்கள். இதையெல்லாம் திருக்குர்ஆன் பல இடங்களில்
தெளிவாகவிளக்கிக் கூறுகிறது.
நபியைப் பார்த்து அந்த மக்கள் கூறினார்கள் நீர் எங்களுக்காகப் பூமியிலிருந்து ஒரு நீர் ஊற்றைப்பீறிட்டு வரும்பn செய்யும் வரை எம்மீது நாங்கள்
நம்பிக்கை கொள்ள மாட்டோம், அல்லது பேரீட்ச மரங்களும் திரட்சைச் செடிகளும் நிரம்பியுள்ள தோட்டம் உமக்கு இருக்க வேண்டும் அதன்
நடுவே ஆறுகள் நீர் ஒலித்தோடச்செய்யவேண்டும்அல்லது நீர் எண்ணுவது போல் வானம் துண்டு துண்டாக இடிந்து எங்கள் மீது விழச்செய்ய
வேண்டும் அல்லது அல்லாஹ் வையும் மலக்குகளையும் நமக்கு முன் நேருக்கு நேராகக் கொண்டு வரவேண்டும் அல்லாது தங்க மாளிகை உமக்கு
இருக்க வேண்டும் அல்லது வானத்தின் மீது நீர் ஏறிச்செல்ல வேண்டும். அங்கிருந்து எங்களுக்காக நாங்கள் படிக்கக் கூடிய ஒரு வேத நூலை நீர்
கொண்டு வந்து தரவேண்டும் அப்போது தான் உம்மை நாய்கள் நம்புவோம் என்று கூறுகின்றனர். என் இறைவ் மிகத்தூய்மையானவன் நான்
இறைவனுடைய ஒரு தூதரான மனிதரே தவிர வேறெதுவுமாக இருக்கின்றேன? என்று நீர் கூறுவீராக (அல்-குர்ஆன் 17:90-93)
மேலும் அவர்கள் கூறினார்கள் இந்த தூதருக்கு என்ன? இவர் மற்றவர்களைப் போலவே உணவு உண்ணுகிறார்கள் கடை வீதிகளில்
நடமாமாடுகிறார். இவருடன் சேர்ந்து அச்சமூட்டி எச்சரிக்ககைச் செய்வதற்காக உரு வானவர் அனுப்பப்பட்டிருக்க வேண்டமா? அல்லது அவருக்கு
ஒரு புதையல் அளிக்கப்பட்ருக்க வேண்டாமா? அல்லது அதிலிருந்து உண்பதற்க்கு ஒரு பழத்தோட்டம் உண்டாகியிருக்க வேண்டாமா? என்று
கூறுகின்றனர். மேலும் அந்த அநியாயக்காரர்கள் (இறை நம்பிக்கையாளர்களை நோக்கி) சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையேத் தவிர
வேறெவரையும் நீங்கள் பின்பற்றவில்லை என்றும் கூறுகிறார்கள் (அல்குர்ஆன் 25:8)
இறைத்தூதர்களில் ஒவ்வொருவரையும் அவர்களுடைய சமூகத்தினர் பைத்தியக்காரன் என்றும் சூனியக்காரன் என்றும் விமர்சித்தனர்.
இவ்வாறே இவர்களுக்கு முன்னிருந்தவர்களிடம் நம் தூதர்களிலிருந்து ஒருவர் வரும் போதெல்லாம் அவர்கள் அவர்கள் அவரை சூனிளக்காரர்
அல்லது பைத்தியக்காரர் என்று கூறாமல் இருந்ததில்லை இவ்வாறு தான் அவர்கள் தங்களுக்குள் நம் தூதர்களை பழிக்க வேண்டுமென
ஒருவருக்கொருவர் உததேசம் செய்துகொண்டனரா? அவர்கள் அக்கிரமக்கார சமூகத்தாராவே இருந்தனர் (அல்குர்ஆன் 51:52)
சத்தியப் பிரச்சாரப்பாதையில் ஈடுபடுகின்ற ஒவ்வொருவரும் இது மாதிரியான விமர்சனத்திற்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் உட்படுத்தப்பட்டுள்ளனர்
அதே நிலையைத்தான் இன்றைக்கும் நாம் சந்திகின்றோம் அல்லாஹ்வின் மீது முழு நம்பிக்ககை வைத்து அவனுடைய மார்க்கத்தின் பால்
அழைக்கின்றவர்களைப் பார்த்து வழிகேடர்கள் தடம் புரண்டவர்கள் என்றெல்லாம் சிலர் விமர்சிக்கின்றார்கள் என்பதற்காக உண்மையான
கொள்கைவாதிகசள் சத்தியத்தை விட்டும் ஓடிவிடமாட்டார்கள் மறாக அவர்களுடைய இறை நம்பிக்கை உறுதியடையம் என்பதை நினைத்து மனம் தளராமல் செயல்பட வேண்டும்.
படியுங்கள் பரப்புங்கள் அல்-ஜன்னத் மாத இதழ்

